சாலைப் பணியாளர்கள் மக்கள் சந்திப்பு பிரசாரம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், அண்ணாசிலை அருகில் திங்கள்கிழமை மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், அண்ணாசிலை அருகில் திங்கள்கிழமை மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில், சாலைப் பணியாளர்களுக்கு நீதி கேட்டு நெடும்பயணமாக புறப்பட்ட பிரசாரக் குழுவினர் பங்கேற்றனர். தில், சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும். பணிக் காலத்தில் உயிர் நீக்கும் சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். சாலை பராமரிப்பை தனியாருக்கு வழங்கக் கூடாது. நெடுஞ்சாலைத் துறையை தனியார் துறையாக மாற்றும் முறையை வன்மையாக எதிர்ப்போம். நெடுஞ்சாலைகளில் மக்கள் பயணிக்க சுங்கவரி வசூல் செய்யும் உரிமையை தனியார் நிறுவனம் செய்யக் கூடாது போன்ற கோரிக்கைகளை விளக்கி பிரசாரம் செய்தனர்.
 இதில் நாமக்கல் மாவட்ட சாலைப் பணியாளர் சங்கத்தினர் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com