இந்திய மாணவர் சங்கம் நாமக்கல் மாவட்டக்குழு சார்பில், மாணவர்களுக்கான திறனாய்வுப் போட்டி நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் டி.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் சி.சந்திரகலா, எம்.தேன்மொழி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலர் பி.ரஞ்சித் குமார் வரவேற்றார்.
நிகழச்சியை தொடக்கி வைத்து அகில இந்திய நிர்வாகக் குழு உறுப்பினரும், மாநில துணைத் தலைவருமான எ.டி.கண்ணன், கல்லூரி தாளாளர் சி.எம்.முத்துசாமி, எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள், பட்டிமன்ற பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பேசினர்.
திறனாய்வுப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர் சபரீஷுக்கு ரூ.10,000 மதிப்புள்ள புத்தகங்கள், 2-ஆம் இடம் பெற்ற மாணவி பிரியங்காவுக்கு ரூ.7,500 மதிப்பு புத்தகங்கள், 3-ஆம் இடம் பெற்ற மாணவர் கார்ல் மார்க்ஸ்க்கு ரூ.5,000 மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் கேடயம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், அதிக மதிப்பெண்களைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை இளங்கதிர், சக்தி, ரஞ்சிக்குமார், பூவரசன், கணேசன், பாரத் ஆகியோர் செய்திருந்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.காயத்திரி நன்றி கூறினார்.