பூங்காவில் மரக் கன்றுகள்: எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் நட்டார்

நாமக்கல் நேரு பூங்காவில் மரக் கன்றுகளை எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் நட்டார்.

நாமக்கல் நேரு பூங்காவில் மரக் கன்றுகளை எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் நட்டார்.
நாமக்கல் நகரை பசுமையாக்கும் நோக்குடன் நாமக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள நேரு பூங்காவில் மரக் கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு நாமக்கல் நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் மயில் சுந்தரம், அக்ரோ தலைவர் ரம்யா சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் எம்.எல்.ஏ. கே.கே.பி.பாஸ்கர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். விழாவில் நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் புவனேஷ், நகரப் பொருளர் ராஜா, நகர துணைச் செயலர் நரசிம்மன், வார்டு செயலர் ரகு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com