திருச்செங்கோட்டில் வக்கீல்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

தமிழக அரசு தனது அரசாணையில் நீதிமன்ற முத்திரை கட்டண உயர்வு குறித்து வெளியிட்ட அரசாணையை மறு சீராய்வு

தமிழக அரசு தனது அரசாணையில் நீதிமன்ற முத்திரை கட்டண உயர்வு குறித்து வெளியிட்ட அரசாணையை மறு சீராய்வு செய்யக் கோரி இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக திருச்செங்கோடு வக்கீல்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சங்க நிர்வாகிகளான ரத்தினம்,சேகரன்,உலகநாதன் ஆகியோர் தெரிவித்ததாவது:
நீதிமன்ற முத்திரை உயர்வு குறித்து தமிழக அரசு அறிவித்த அரசாணையை மறுசீராய்வு செய்து புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும். வக்கீல்கள் சேம நலநிதியை 10 லட்சமாக உயர்த்த வேண்டும்.மேலும் தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒருநாள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com