அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 150 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில், மாவட்ட அளவில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றன.
ஆண், பெண் இருபாலருக்கும் 100மீ. ஓட்டம், 200மீ. ஓட்டம், 800மீ. ஓட்டம், 1,500மீ. ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டெறிதல், 4,100மீ. தொடர் ஓட்டம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை கோட்டாட்சியபர் எம்.ராஜசேகரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
இதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 150 அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு புதன்கிழமை மாலை பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் நபர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர் என மாவட்ட விளையாட்டு அலுவலர் சி.த.பெரியகருப்பன் தெரிவித்தார்.