திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 70 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.
சங்கத்துக்கு நாமக்கல், அரூர், ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, ஜேடர்பாளையம், பரமத்தி வேலூர், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் 1,300 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
ஏலத்தில் பங்கேற்ற ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் பகுதிகளைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒப்பந்தப்புள்ளி மூலம் ஏலம் கோரினர்.
தொடர்ந்த நடைபெற்ற ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ. 7,189 முதல் ரூ. 9,449 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ. 6,899 முதல் ரூ. 7,569 வரையும், ஏலத்தில் அதிகபட்சமாக பனங்காளி மஞ்சள் ரூ. 9,716 முதல் ரூ.19,199 வரையும் விலை போனது. மொத்தம் ரூ. 70 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.