திருச்செங்கோட்டில் தீப விழா கமிட்டியின் செயற்குழுக் கூட்டம்

திருச்செங்கோட்டில் திருகார்த்திகை தீப விழா நடத்துவதற்கான  கமிட்டியின் செயற்குழுக் கூட்டம்  நடைபெற்றது.

திருச்செங்கோட்டில் திருகார்த்திகை தீப விழா நடத்துவதற்கான  கமிட்டியின் செயற்குழுக் கூட்டம்  நடைபெற்றது.
இதில் தலைவர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் . பொருளாளர் குமரவேல் முன்னிலை வகித்தார் . கூட்டத்தில், வருகிற கார்த்திகை தீபத்தன்று,  அர்த்தநாரீஸ்வரர் மலை மீது உள்ள  பாண்டீஸ்வரர் கோயிலில் பிரம்மாண்ட கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது . மகா தீப கொப்பரை மற்றும் தீப திரிகளை பொதுமக்கள் தரிசிக்கும் விதமாக டிசம்பர் முதல் தேதியன்று, துறவியர் பெருமக்கள் , ஆன்மிக பக்தர்கள் கலந்து கொள்ளும் , மகா தீப ஊர்வலம் நான்கு ரத வீதிகளில் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . சிவனடியார்கள் அமைப்பின் நிறுவனர் மயில் முருகேஷ் சுவாமிகள் , தீப விழா அழைப்பிதழை வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com