திருச்செங்கோட்டில் திருகார்த்திகை தீப விழா நடத்துவதற்கான கமிட்டியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தலைவர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் . பொருளாளர் குமரவேல் முன்னிலை வகித்தார் . கூட்டத்தில், வருகிற கார்த்திகை தீபத்தன்று, அர்த்தநாரீஸ்வரர் மலை மீது உள்ள பாண்டீஸ்வரர் கோயிலில் பிரம்மாண்ட கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது . மகா தீப கொப்பரை மற்றும் தீப திரிகளை பொதுமக்கள் தரிசிக்கும் விதமாக டிசம்பர் முதல் தேதியன்று, துறவியர் பெருமக்கள் , ஆன்மிக பக்தர்கள் கலந்து கொள்ளும் , மகா தீப ஊர்வலம் நான்கு ரத வீதிகளில் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . சிவனடியார்கள் அமைப்பின் நிறுவனர் மயில் முருகேஷ் சுவாமிகள் , தீப விழா அழைப்பிதழை வெளியிட்டார்.