நாமக்கல்
அரசுக் கல்லூரியில் அலுவலக உதவியாளர் காலி பணியிடம்
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் அ.லீலாகுளோரிபாய் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அலுவலக உதவியாளர் ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இன சுழற்சி அடிப்படையில் இப் பணியிடம் எம்.பி.சி. பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது. 18 முதல் 32 வயது வரை உடைய, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, எம்.பி.சி. வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம் செய்தவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். இதற்குத் தகுதியான நபர்கள் வரும் 20ஆம் தேதிக்குள் கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பத்தை அனுப்பிவைக்க வேண்டும்.