காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேரு பிறந்த நாள் விழா

நாமக்கல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள் விழா நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நாமக்கல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள் விழா நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மோகன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் ரா. செழியன் முன்னிலை வகித்தார். விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.எம். ஷேக்நவீத் பங்கேற்று நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து நாமக்கல் நகராட்சி உருது துவக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகங்களை மாவட்டத் தலைவர் வழங்கினார்.
விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சித்திக், சண்முகம், மாணிக்கம், நகரத் துணைத் தலைவர்கள் குமார், செல்வன், வட்டாரத் தலைவர்கள் செங்கோட்டுவேல், ரங்கராஜன், ரவி அருணாச்சலம், நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்  ராஜேந்திரன் மற்றும் இளங்கோ, லோகநாதன், காவேரி,  சதீஷ் கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com