குமாரபாளைத்தில் உலக மனநல விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அன்பு செவிலியர் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலம் குமாரபாளையம் ராஜம் திரையரங்கு அருகே தொடங்கி சேலம் சாலை, ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு வழியாகச் சென்று கெüரி திரையரங்கு தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு அருகே முடிவடைந்தது.
ஊர்வலத்தைக் கல்லூரி முதல்வர் டி.ஜெயலட்சுமி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். வேலை செய்யும் இடத்தில் மனநலம், பொதுமக்களுக்கு மனநலத்தைப் பாதுகாத்தல், பிறரின் உணர்வுகளை மதித்தல், மனநோய், மூட நம்பிக்கைகளை நீக்குதல், மனநலம் பாதிக்கப்பட்டோரிடம் ஆதரவு காட்டுதல், சிகிச்சை அளித்தல், உதவுதல் குறித்து விழிப்புணர்வு தட்டிகளை ஏந்தியபடி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதோடு, முழக்கங்களும் எழுப்பப்பட்டன.