கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 

கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 
நாமக்கல் அருகே முதலைப்பட்டியைச்  சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் பரத்(20). இவர் நாமக்கல்லில் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். புதன்கிழமை விடுமுறை தினம் என்பதால்,  நண்பர்களுடன் சேர்ந்து நல்லிப்பாளையம் மயானம் அருகே உள்ள கிணற்றுக்கு குளிக்கச்சென்றார். கிணற்றின் படிக்கட்டில் நின்று குளித்துக்கொண்டிருந்த பரத்,  திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.  நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கினார்,  நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். 
தகவலறிந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று கிணற்றுக்குள் இருந்து பரத் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  சம்பவம் குறித்து நல்லிப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com