திமுக சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்,  மாவட்ட

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்,  மாவட்ட பொறுப்பாளர் செ.காந்திச்செல்வன் தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. 
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  வரும் மக்களவைத் தேர்தலில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்குகள் பெறும் வகையில் ஒன்றிய,  நகர, பேரூர் பகுதிகளில், சார்பு அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் தீவிரமாக பணியாற்றுவது.  மக்களவைத் தேர்தலில் குழு அமைத்து பணியாற்றுவது.  வரும் 16 ஆம் தேதி கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பது. 
  கூட்டத்தில்,  மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ப.ராணி,   நாமக்கல் நகரப் பொறுப்பாளர் ராணா ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com