நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 72-வது பிறந்த நாள்விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
ராசிபுரம் காந்திமாளிகை முன்பாக நடந்த விழாவில் கேக் வெட்டி பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினர். பின்னர் ஸ்ரீநித்யசுமங்கலி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
இவ் விழாவுக்கு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர்.விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன் , நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.முரளி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். வர்த்தக அணி தலைவர் டி.ஆர்.சண்முகம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் மணிகோபால், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.