பரமத்தி வேலூர் கொங்கு பள்ளி வளாகத்தில் உள்ள கற்பக விநாயகர் கோயில் குடமுழுக்கு வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்குகிறது. திங்கட்கிழமை காலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, யாகபூஜை, திரவியாகுதி, யாத்ர தானமும், காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும் நடைபெறுகிறது. காலை 9.15 மணிக்கு விமான கோபுரத்துக்கு புனித நீர் ஊற்றுதல், 9.30 மணிக்கு கற்பக விநாயகர் மூலமூர்த்திக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது.