எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், வையப்பமலை வாரச்சந்தை வளாகத்தில் நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது. இப் புகைப்படக் கண்காட்சியினை வாரச்சந்தைக்கு வருகை தந்த பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.
இப் புகைப்படக் கண்காட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் அமைச்சர் பி.தங்கமணி மற்றும் அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்.மு.ஆசியா மரியம் கலந்து கொண்ட முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இப் புகைப்படக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
இக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு , தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை இப் புகைப்படக் கண்காட்சியின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது என்று தெரிவித்தனர்.
இந் நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.அண்ணாதுரை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) கி.மோகன்ராஜ் உட்பட அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.