கைவிடப்பட்ட பெண் சிசு மீட்பு

பள்ளிபாளையம் அருகே பிறந்து சில மணி நேரத்தில் முள்புதரில் வீசப்பட்ட பெண் சிசு மீட்கப்பட்டது.

பள்ளிபாளையம் அருகே பிறந்து சில மணி நேரத்தில் முள்புதரில் வீசப்பட்ட பெண் சிசு மீட்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் வியாழக்கிழமை வீட்டின் அருகே சாலையோரம் இருந்த  முள்புதருக்குள் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசு கிடந்ததைக் கண்டார்.
இதனையடுத்து அந்தப் பெண் சிசுவை மீட்ட அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்  குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்த சிசுவுக்கு அப்பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண் தாய்ப்பால் கொடுத்துள்ளார். இதன்பிறகு அந்த சிசு உறங்கத் தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர். 
பிறகு பள்ளிபாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தை காடச்சநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com