நாமக்கல்லில் வரும் 24 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 24-ஆம் தேதி நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும் தையல், செவிலியர் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். முகாமில் சென்னை, கோவை, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்ததைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
முகாமில் பங்கேற்க விரும்பும் பணி நாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.