தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை பகுதியில் பெரியப்பா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தவர் புதன்கிழமை காலை தூக்கிட்டு

பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை பகுதியில் பெரியப்பா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தவர் புதன்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கோட்டுவீராம்பாளையத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் இளம்பரிதி (40). இவர் பரமத்தி வேலூர் பேட்டையில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். திருமணமாகாத இளம்பரிதி பெரியப்பா வீட்டின் மேல் மாடியில் உள்ள கழிவறைக்கு அருகே உள்ள கூரையில் புதன்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இளம்பரிதியின் பெரியப்பா கந்தசாமி அளித்த புகாரின் அடிப்படையில், பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com