வாழப்பாடி இலக்கிய பேரவை சார்பில், ராஜன் கணினி அச்சகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர் படும் பாடு என்ற தலைப்பில் சிந்தனை கருத்தரங்கும் நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருக்குறள் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். தமிழக ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கோ.முருகேசன், இலக்கிய பேரவை செயலாளர் சிவ.எம்கோ ஆகியோர், ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.