சிறுதானிய விவசாயிகளுக்கு 3 மாத சான்றிதழ் பயிற்சி வகுப்பு

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர்களுக்கான 3 மாத சான்றிதழ் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
சிறுதானிய விவசாயிகளுக்கு 3 மாத சான்றிதழ் பயிற்சி வகுப்பு

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர்களுக்கான 3 மாத சான்றிதழ் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (நபார்டு) ஊரக வளர்ச்சிக்கான வங்கியாளர்கள் நிறுவனம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து இந்த பயிற்சி வகுப்பை தானம் அறக்கட்டளை நடத்த உள்ளது. சிறுதானியம் பயிரிடும் விவசாயிகளுக்கு மேலாண்மை மற்றும் வியாபார நுணுக்கங்கள் இப்பயிற்சியில் கற்றுத் தரப்பட உள்ளதாக டாடா-தானம் அறக்கட்டளையின் இயக்குநர் ஏ.குருநாதன் கூறினார். நபார்டு சென்னை மண்டல இணை பொது மேலாளர் ஏ.அர்த்தநாரீஸ்வரன், ஊரக வளர்ச்சிக்கான வங்கியாளர்கள் நிறுவன நிர்வாகி எம்.ஆர்.கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com