மதுரையில் சனிக்கிழமை வீட்டில் ஏற்பட்ட தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகனை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணாம்பாள்(72). இவர் தனது மகன் தங்கப்பாண்டி மற்றும் மகள் ஜோதியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். தங்கப்பாண்டி(42) கூலி வேலை செய்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை இரவு குளியலறைக்குச் சென்றுள்ளார். அப்போது அறையின் கதவு உடைந்து அவரது மார்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், குளியலறைக் கதவை சரி செய்யும் படி தனது தாய் கண்ணாம்பாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கினாராம். கீழே விழுந்த அவர் வீட்டுச் சுவற்றில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்ணம்பாளின் மகள் ஜோதி அளித்தப் புகாரின் பேரில் திலகர்திடல் போலீஸார் தங்கப்பாண்டியை சனிக்கிழமை கைது செய்தனர்.