மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் சாத்தையாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 44 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் பரவலாக நல்ல மழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியிருந்தது. சில இடங்களில் மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்) விவரம்): சாத்தையாயறு - 68, வாடிப்பட்டி - 44 , ஆண்டிபட்டி - 36.6, தல்லாகுளம் - 20.3, மதுரை தெற்கு - 17, பேரையூர் -13, கள்ளந்திரி - 11, மேலூர் - 7.2, குப்பனாம்பட்டி - 5.2, திருமங்கலம் - 2.8, உசிலம்பட்டி - 2.2, சிட்டம்பட்டி -1.