திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தனக்கன்குளம் அரவிந்த் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தெய்வேந்திரன்(28). வழக்குரைஞருக்கு படித்திருந்த இவர் வியாழக்கிழமை இரவு தனக்கன்குளம் முல்லை நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது மதுரை -திருமங்கலம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிக்ச்சைபெற்றுவந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். ஆஸ்டின்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.