"நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரி உசிலம்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலர் விடுதலைமாரி தலைமை வகித்தார். பொருளாளர் கரிகாலன், துணைச் செயலர் சின்னசாமி, ஒன்றிய துணைப் பொருளாளர் பாலமுருகன், துணைச் செயலர் ஈஸ்வரன்உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலர் பழனிச்சாமி வரவேற்றார். மாநில துணை செயலர் சி.தென்னரசு நன்றி கூறினார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.