பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

மதுரையில் பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பறித்துச்சென்றதாக வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பறித்துச்சென்றதாக வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை பைபாஸ் சாலை பாரதியார் தெருவைச் சேர்ந்த முத்தையா மனைவி சிட்டம்மாள்(52). இவர் வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் கடைக்குச்சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சிட்டம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.   செல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com