மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 67 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாநகரில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இதன் எதிரொலியாக மதுரை நகரில் வியாழன், வெள்ளி இருநாள்களும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மதுரை மாநகரப் போக்குவரத்துப் போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாததது போன்ற விதிமீறல்களுக்காக 67 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.