அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் உபகோயிலான திருவாதவூர் அருள்மிகு திருமறைநாதர் கோயிலில் டிசம்பர் 19-ஆம் தேதி காலை 8.45 முதல் 10.30 மணிக்குள் சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது.
இதையொட்டி அன்றைய தினம் சுவாமி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். பக்தர்களின் வசதிக்காக மதுரை பெரியார், ஆரப்பாளையம், மேலூர் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.