குடிநீர் கோரி சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே திங்கள்கிழமை குடிநீர்  கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி அருகே திங்கள்கிழமை குடிநீர்  கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 குருவிளாம்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு 4 மாதங்களாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்பட வில்லை. இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதையடுத்து பொதுமக்கள் உசிலம்பட்டி- பேரையூர் பிரதான சாலையில் குருவிளாம்பட்டி விலக்கில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த உசிலம்பட்டி ஒன்றிய ஆணையர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் மறியல் செய்தவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தினங்களில் இப்பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் இப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com