தனியார் பேருந்து மோதி விவசாயி சாவு

மதுரை அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.எஸ்.கோட்டையைச் சேர்ந்தவர் விவசாயி அருணகிரி (60). இவர் தனது உறவினர் கதிரேசனுடன் மதுரை மாவட்டம் ஒத்தக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளார்.  நான்கு வழிச்சாலையில் ஒத்தக்கடை சந்திப்பில் சென்றபோது, மேலூரில் இருந்து மதுரை வந்த தனியார் பேருந்து,  மோட்டார் சைக்கிள் மீது மோதியது.   இதில் அருணகிரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த கதிரேசன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸார் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநர் மானாமதுரையைச் சேர்ந்த குமரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com