மாநில பூப்பந்து போட்டியில்  ஓ.சி.பி.எம். பள்ளி முதலிடம்

மாநில அளவிலான பூப்பந்துப் போட்டியில் மதுரை ஓ.சி.பி.எம்.  பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது.

மாநில அளவிலான பூப்பந்துப் போட்டியில் மதுரை ஓ.சி.பி.எம்.  பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது.
நியூசன் கிளப் சார்பில் 5- ஆம் ஆண்டு மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான பூப்பந்துப் போட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற்றது. இதில் 25 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி  அணி முதல் சுற்றில் எண்ணூர் அணியையும், இரண்டாவது போட்டியில் பல்லாவரம் அணியையும் வென்று லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றது.  
 தொடர்ந்து முதல் லீக் போட்டியில் நாமக்கல் மாவட்ட அணியை வென்ற ஓ.சி.பி.எம்.  பள்ளி அணியினர்,  பின்னர் காஞ்சிபுரம் அணியை வென்றதன் மூலம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் சென்னை மயிலாப்பூர் அணியை 35-20, 35-23 ஆகிய புள்ளிக்கணக்கில் வென்று ஓ.சி.பி.எம். பள்ளி அணி  தங்கப்பதக்கம்  பெற்றது.
மாநில அளவிலான போட்டியில் முதலிடம் வகித்த ஓ.சி.பி.எம். பள்ளி அணியில் இடம் பெற்ற மாணவியரை மதுரை ராமநாதபுரம் திருமண்டில பேராயர் எம்.ஜோசப், பி.லீலாமனோகரி மற்றும் பள்ளித் தாளாளர் எஸ்.நிர்மலா,  தலைமை ஆசிரியர் என்.மேரி ஆகியோர் பாராட்டினர்.
மேலும் மாணவியருக்கு சிறப்பாகப் பயிற்சி அளித்த பள்ளி உடற்கல்வி இயக்குநர் டி.ரூபிசெல்லத்தாய், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்.ராஜேஷ்கண்ணன், பி.சர்மிளா ஆகியோரையும் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com