மதுரை மாவட்டம், குருவித்துறையில் கோயில் கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், சோழவந்தானைச் சேர்ந்த பாண்டி மனைவி மூக்காயி (65). இவர், குருவித்துறை சித்திரதவல்லப சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூக்காயி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்று விட்டாராம்.
சம்பவம் தொடர்பாக மூக்காயி அளித்தப்புகாரின்பேரில் காடுபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.