திருப்பரங்குன்றம் அருகே ஞாயிற்றுக்கிழமை முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டி ரயில்வே கேட் பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
ரயில்வே போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர் ரயிலில் பயணம் செய்த நபராக இருக்கலாம் எனவும், படியில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.