பிரம்மாகுமாரிகள் சமாஜத்தின் குகைக்குள் யோக அனுபவம்

மதுரையில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் குகைக்குள் யோக அனுபவ நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரையில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் குகைக்குள் யோக அனுபவ நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
 மதுரை சமூக அறிவியல் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குகை போல அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதில் சென்று யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக இசையுடன் கூடிய யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று குகை போன்ற அமைப்புக்குள் சென்று யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
 நிகழ்ச்சியை மதுரை பிரம்மா குமாரிகள் துணை மண்டல இயக்குநர் பி.கே.மீனாட்சி தொடக்கி வைத்தார். தெற்கு ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் பி.வி.முரளிகிருஷ்ணா, சமூக அறிவியல் கலைக் கல்லூரி நிறுவனர் டி.வி.பி.ராஜா, மதுரை பிரம்மா குமாரிகள் துணை மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.கே.உமா, மதுரை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.வசந்தவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com