உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாளை அக்கட்சினர் திங்கள்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
உசிலம்பட்டி- தேனி சாலையில் உள்ள திருமுருகன் கோயிலில் அக்கட்சியினர் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அதைத் தொடர்ந்து அரசு குடிருப்பு பகுதியில் 25 மரக்கன்றுகளை நட்டனர்.
இதில் காங்கிரஸ் கட்சியின் உசிலம்பட்டி வட்டாரத் தலைவர் வெஸ்டன் முருகன், நகரத் தலைவர் சசிவீரணத்தேவன், மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் தீபாபாண்டி, மகளிர் அணி முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.