சத்துணவு ஊழியர்கள் 2-ஆவது நாளாக மறியல்: 260 பேர் கைது

மதுரையில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 260 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 260 பேர் கைது செய்யப்பட்டனர்.
    முழுநேர ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாம் நாளான புதன்கிழமை, மதுரை அண்ணா பேருந்து நிலையம் எதிரே மாவட்டத் தலைவர் கெளரியம்மாள் தலைமையில், சத்துணவு ஊழியர்கள் கூடினர். அப்போது, சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறை சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.    இதைத் தொடர்ந்து, மறியலுக்கு முயன்ற சத்துணவு ஊழியர்கள் 260 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com