கார் மோதி விவசாயி சாவு

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
கொட்டாம்பட்டி அருகே உள்ள பரமநாதபுரத்தை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கவாசகம் (65). இவர், சனிக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் கருங்காலக்குடிக்கு சென்றுகொண்டிருந்தார். கச்சிராயன்பட்டி விலக்கில் வந்தபோது திருச்சியிலிருந்து மதுரை சென்ற கார் மோட்டார் சைக்கிள்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மாணிக்கவாசகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com