மதுரை பனகல்சாலையில் உள்ள இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இடமாறுதல் கலந்தாய்வில் மாவட்டத்துக்குள் இருந்த 9 இடங்களில் 5 இடங்களுக்கு இடமாற்ற ஆணையை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பெற்றனர். அதைத் தொடர்ந்து வெளிமாவட்ட அளவிலான கலந்தாய்வில் மீதமிருந்த இடங்களுக்கான ஆணையும் வழங்கப்பட்டது. இரண்டாம்நாளான சனிக்கிழமை மாவட்டத்துக்குள் நடந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் வெளிமாவட்டத்துக்கு 10 பேர் பதவி உயர்வு பெற்று சென்றனர். வெளிமாவட்டத்துக்குச் செல்ல விரும்பாததால், பதவி உயர்வு வேண்டாம் என 7 பேர் தெரிவித்துவிட்டனர்.