ஐஸ்கிரீம் பார்லரில் ரூ.40 ஆயிரம் திருட்டு

மதுரையில் ஐஸ்கிரீம் பார்லரில் மேற்கூரையைப் பிரித்து ரூ. 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் ஐஸ்கிரீம் பார்லரில் மேற்கூரையைப் பிரித்து ரூ. 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  மதுரை பாஸ்டின் நகர் அன்பு தெருவைச் சேர்ந்தவர் வேதராஜகுமார் மனைவி ஆனந்தி (34). இவர் பைபாஸ் சாலையில் ஐஸ்கிரீம் பார்லர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் விற்பனை முடிந்து பார்லரை சனிக்கிழமை இரவு பூட்டி விட்டுச் சென்றார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பார்லருக்குச் சென்றபோது அதன் மேற்கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பணப் பெட்டியில் வைத்திருந்த ரூ. 40ஆயிரத்தை திருடிச் சென்றது தெரிந்தது.
  இதுகுறித்து வேதராஜ்குமார் அளித்தப் புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com