மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த குழந்தை சிகிச்சைப்பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி(37). இவரது மகன் கௌதம்(3). கடந்த 7-ஆம் தேதி கருப்பசாமியின் மனைவி வீட்டில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கொதிக்கும் எண்ணெய் இருந்த சட்டியில் குழந்தை கௌதம் தவறி விழுந்தது. இதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை சிகிச்சைப்பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தது. சம்பவம் தொடர்பாக கருப்பசாமி அளித்தப்புகாரின்பேரில் பேரையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.