சிங்கப்பூர்-மதுரை விமானத்தில் கடத்தப்பட்ட 1 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு செவ்வாய்க்கிழமை விமானத்தில் கடத்திவரப்பட்ட  ரூ.36 லட்சம் மதிப்பிலான ஒன்றே கால் கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு செவ்வாய்க்கிழமை விமானத்தில் கடத்திவரப்பட்ட  ரூ.36 லட்சம் மதிப்பிலான ஒன்றே கால் கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
   சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு செவ்வாய்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் சென்னையைச் சேர்ந்த கெளத் மொய்தீன் என்பவர் எலக்ட்ரானிக் பொருள்களில் 1 கிலோ 186 கிராம் தங்கக்கட்டிகளை மறைத்துக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதேபோல மற்றொரு பயணி தனது உடைமைக்குள் 108 கிராம் தங்கக்கட்டியை மறைத்து கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.36 லட்சம் ஆகும். இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com