உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு மதுரையில் ரயில்வே ஊழியர்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. ரயில்வே மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற இம்முகாமில்கோட்ட மேலாளர் நீனு இட்டியரா தலைமை வகித்தார்.
170 ரயில்வே ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 32 பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.மதுரைக் கோட்ட முதுநிலை மருத்துவக் கண்காணிப்பாளர் ஜி.சாஹூ, முதுநிலை மருத்துவ அலுவலர் கே.கிரிபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.