டெங்கு காய்ச்சலுக்கு பெண் சாவு

மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயரிழந்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயரிழந்தார்.
  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ் மனைவி மீனாட்சி (38). இவர், கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில்,  வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். பின்னர்,  மதுரை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், மீனாட்சிக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மீனாட்சி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com