வெள்ளலூர் எல்கைப் பந்தய மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஞாயிற்றுக்கிழமை பந்தயம் நடைபெற்றது.
மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி எல்கைப் பந்தயப் போட்டியில், 91 வண்டிகள் பங்கேற்றன. இப்போட்டி, கோட்டநத்தம்பட்டி-சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதில், பெரிய மாடுகளுக்கான பந்தயத்தில் 29 வண்டிகள் பங்கேற்றன. சின்ன மாடுகளுக்கான பந்தயத்தில் 62 வண்டிகள் கலந்துகொண்டன. சாலை நெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் பந்தயத்தை கண்டு ரசித்தனர்.