பல்கலை. எம்ஃபில், பிஎச்டி நேர்முக தேர்வுக்கு அழைப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில், பிஎச்டி-க்கு நுழைவுத் தேர்வு எழுதியவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளன.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில், பிஎச்டி-க்கு நுழைவுத் தேர்வு எழுதியவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளன.
 இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு வி.சின்னையா வெளியிட்ட செய்தி விவரம்:  
 எம்ஃபில், பிஎச்டி  முழுநேரம் மற்றும் பகுதிநேர ஆய்வுக்கு நுழைவுத் தேர்வு எழுதிய அனைவரும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கவேண்டும்.  சனிக்கிழமை (அக்.7) காலையில் எம்ஃபில் பாடத்துக்கும், ஞாயிற்றுக்கிழமை (அக்.8) பிஎச்டி-க்கும் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
  காமராஜர் பல்கலைக்கழகம், பல்கலை நகரில் நடைபெறும் நேர்முகத் தேர்வானது அந்தந்தத் துறை வளாகங்களில் நடைபெறவுள்ளன. காலை 10 மணிக்குத் தொடங்கும் நேர்முகத் தேர்வுக்கு நுழைவுத் தேர்வு எழுதியவர்களுக்கு அழைப்பும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
  நுழைவுத் தேர்வு எழுதி நேர்முகத் தேர்வுக்கு அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாதவர்களும் இதில் பங்கேற்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com