மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே அரசுப்பேருந்து நடத்துநர் வீட்டில் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.
சமயநல்லூர் அருகே உள்ள பரவை சரவணாநகர் விரிவாக்கம் ஆவுடையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 57). அரசுப் பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அக்.2-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மதுரையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து வியாழக்கிழமை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்றுபார்த்தபோது, பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.15ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தன. இதுதொடர்பாக ஜெயராமன் அளித்தப் புகாரின்பேரில் சமயநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.