மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் மற்றும் உப கோயில் உண்டியல்களில் ரூ. 90.11 லட்சம் ரொக்கம் காணிக்கை செலுத்தப்பட்டு இருந்தது.
மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களான மாரியம்மன், முக்தீஸ்வரர் மற்றும் செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில் உள்ளிட்டவற்றில் செப்டம்பர் மாத உண்டியல் எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது.
மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் இணைஆணையர் என்.நடராசன் முன்னிலையில் எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், கோயில்பணியாளர்கள், பக்தர்கள் பேரவையினர், வங்கி அலுவலர்கள், மாணவ, மாணவியர் ஈடுபட்டனர்.
ரூ.90.11 லட்சம் ரொக்கம், 601 கிராம் தங்கப் பொருள்கள், 2 கிலோ 264 கிராம் வெள்ளிப் பொருள்கள் , 1 கிலோ 415 கிராம் பிரதமை தகடுகள், 5 கிலோ 650 கிராம் பித்தளை பொருள்கள், 491 டாலர்கள் வெளிநாட்டுப் பணம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.