மாநகராட்சி குறைதீர் முகாம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 30 பேர் மனுக்களை அளித்தனர்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 30 பேர் மனுக்களை அளித்தனர்.
 மாநகராட்சி துணை ஆணையர் ப.மணிவண்ணன் தலைமையில் முகாம் நடைபெற்றது.  முகாமில் குடிநீர் இணைப்புக் கோரியும், வீட்டு வரி பெயர் மாற்றம்,  வரியைக்குறைக்கக் கோருதல், புதிய கட்டட வரைபட அனுமதி என 30 பேர் மனுக்களை அளித்தனர்.  
மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என துணை ஆணையர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு  உத்தரவிட்டார். மேலும், கடந்த முகாமில்  பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும் துணை ஆணையர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். முகாமில் மண்டலம் 2 அலுவலக உதவி ஆணையர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com