மதுரை மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட கை, கால் குறைபாடுடைய, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆங்கில மொழிக் கல்வி மற்றும் கணினி பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் இப் பயிற்சியை வழங்கும். கை, கால் குறைபாடுடையோர் 40 பேர், பார்வையற்றோர் 10 பேர் என மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப் பயிற்சியில் சேர விரும்புவோர், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்று நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
அண்ணா பேருந்து நிலையம் எதிரே உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அக்டோபர் 31-க்குள் தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விவரங்களுக்கு 0452-2529695 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.