மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 55 பவுன் நகைகள் மாயமானதாக, புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கனரா வங்கியின் மதுரை மண்டல அலுவலர் மீனாட்சி சுந்தரம், சோழவந்தான் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் மனு: மதுரை மாவட்டம், சோழவந்தானில் இயங்கி வரும் வங்கிக் கிளையில் 3 பேரின் 55 பவுன் நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்தன.
இந்த நகைகள் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், வங்கியில் தணிக்கை மேற்கொண்டபோது, பாதுகாப்பு பெட்டகங்களிலிருந்த மேற்கண்ட 55 பவுன் நகைகளைக் காணவில்லை என்று தெரிவித்துள்ளார். சோழவந்தான் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.