வங்கி பாதுகாப்புப்  பெட்டகத்தில் 55 பவுன் நகை மாயம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 55 பவுன் நகைகள் மாயமானதாக, புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 55 பவுன் நகைகள் மாயமானதாக, புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
     கனரா வங்கியின் மதுரை மண்டல அலுவலர் மீனாட்சி சுந்தரம், சோழவந்தான் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் மனு: மதுரை மாவட்டம், சோழவந்தானில் இயங்கி வரும் வங்கிக் கிளையில் 3 பேரின்  55 பவுன் நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்தன.
     இந்த நகைகள் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், வங்கியில் தணிக்கை மேற்கொண்டபோது, பாதுகாப்பு பெட்டகங்களிலிருந்த மேற்கண்ட 55 பவுன் நகைகளைக் காணவில்லை என்று தெரிவித்துள்ளார். சோழவந்தான் போலீஸார்  விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com