மதுரை சிறையில் கஞ்சா, செல்லிடப்பேசி பறிமுதல்

மதுரை மத்தியச் சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைதிகளின் அறையில் இருந்து கஞ்சா, செல்லிடப்பேசி ஆகியவை புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுரை மத்தியச் சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைதிகளின் அறையில் இருந்து கஞ்சா, செல்லிடப்பேசி ஆகியவை புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் சிறை அறைக்குள் கஞ்சா, செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்களை சட்ட விரோதமாக பயன்படுத்துவதாக சிறை நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சிறையில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள  அறைகளில்  சோதனை மேற்கொண்டனர். இதில் இரண்டாம் பிளாக் பகுதியில் 50 கிராம் கஞ்சா, செல்லிடப்பேசி,  பேட்டரி, சிம் கார்டு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர்(பொறுப்பு)  தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் பேரில் கரிமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com